சூதாடிய 5 பேர் கைது



நெகமம் அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெகமம் அடுத்த சுந்தரகவுண்டனூர் அருகே பணம் சூதாட்டம் நடைபெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நெகமம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் விளாமரத்துப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (வயது 37), ராமு (33), அருண் (37), சுண்டக்காம்பாளையம் லிங்குசாமி (28), புக்குளம் காளிமுத்து (47), சுந்தரகவுண்டனூர் சென்னியப்பன் ஆகிய 6 பேரை சுற்றி வளைத்தனர். ஆனால் சென்னியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற 5 பேரும் போலீசில் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire