சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு
x

பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா 5 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷபிக் மற்றும் சத்திய நாராயணா பிரசாத் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் 5 பேரையும் சென்னை ஐகோர்டடின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து, கூடுதல் நீதிபதிகளான 5 பேரையும் கடந்த வாரம் நிரந்தர நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

இந்த நிலையில், இந்த 5 நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக்கொண்டனர். பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா 5 பேருக்கும் நிரந்தர நீதிபதிகளாக பதவிபிரமாணம் செய்துவைத்தார்.


Next Story