பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை


பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை
x

பெரம்பலூரில் கொரோனாவுக்கு 72 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் பெரம்பலூர் தாலுகாவில் 6 பேரும், வேப்பந்தட்டை, ஆலத்தூர் தாலுகாக்களில் தலா 3 பேரும், வேப்பூர் தாலுகாவில் 2 பேரும் என மொத்தம் 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் ஆவர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 57 பேர் வீட்டு தனிமையிலும், 12 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 214 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story