தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாகிறதா..? சட்டப்பேரவையில் அமைச்சர் புதிய தகவல்


தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாகிறதா..? சட்டப்பேரவையில் அமைச்சர் புதிய தகவல்
x

தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் அமைக்கக் கோரியதற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.


Next Story