திருச்சி- வாளாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரத்தில் 8 பேர் கைது!


திருச்சி- வாளாடி அருகே ரெயில் தண்டவாளத்தில் டயர் வைத்த விவகாரத்தில் 8 பேர் கைது!
x

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 8 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

திருச்சி,

கடந்த 2ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில் பிச்சாண்டார் கோவில் - வாளாடி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து போது, தண்டவாளத்தில் இரண்டு லாரி டயர்கள் இருப்பதை கண்டு ஓட்டுநர், ரெயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே வீசப்பட்ட நிலையில், மற்றொரு டயர் ரயில் எஞ்சினில் சிக்கியது.

இதனையடுத்து, ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. எஞ்சினில் சிக்கிய டயரை வெளியே எடுத்து சரி செய்த பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயிலை விபத்துக்கு உள்ளாக்கும் வகையில் டயர்கள் வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இதுவரை 8 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story