8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை


8-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
x

கோப்புப்படம்

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 8-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட குளத்தூர் தாலுக்கா நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 31.3.2024 முதல் வரும் 9.4.2024 வரை பங்குனி திருவிழா நடைபெறுகிறது. இதனிடையே ஏப்ரல் 8-ந் தேதி திங்கட்கிழமை தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 13-ந் தேதி சனிக்கிழமை அன்று பணி நாள் எனவும் வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 14-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. தேர்வுகள் முன்கூட்டியே அறிவித்தபடி நடைபெறும். அத்தியாவசிய பணிகள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் அலுவலர்கள் பணியாளர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.

மேலும் உள்ளூர் விடுமுறை நாளான 8-ந் தேதி திங்கட்கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினை கருதியும் அவசர அலுவலர்கள் மேற்கொள்ளும் பொருட்டு செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story