தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை..!


தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை..!
x
தினத்தந்தி 8 Aug 2023 5:26 AM GMT (Updated: 8 Aug 2023 7:16 AM GMT)

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 25-ம் தேதி 400 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை கைது செய்தனர். மேலும் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மீனவர்களின் வழக்கு இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் 9 பேரையும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story