திருத்தணியில் குடும்ப தகராறில் இறைச்சி கடை ஊழியர் தற்கொலை


திருத்தணியில் குடும்ப தகராறில் இறைச்சி கடை ஊழியர் தற்கொலை
x

திருத்தணியில் குடும்ப தகராறில் இறைச்சி கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

குடிப்பழக்கத்திற்கு அடிமை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 54). இவர் திருத்தணி பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு அமுலு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கடந்த சில தினங்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆனந்தன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். அப்போது மனைவி அமுலுக்கும் ஆனந்தனுக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மன உளைச்சலில் இருந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆனந்தனை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற திருத்தணி போலீசார் ஆனந்தனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story