அய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!


அய்யா....அய்யா... இதை கருணாநிதியின் நினைவிடத்தில் வெச்சுருங்க: முதல்-அமைச்சரிடம் பேனா வழங்கி கோரிக்கை வைத்த சிறுமி...!
x

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தி வருகிறார்,இந்நிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியே வந்தார்.

அப்போது வேலூர் மாவட்டம் காட்பாடி வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த யாழினி என்ற 4 ஆம் வகுப்பு மாணவி, முதலமைச்சரிடம் பேனா ஒன்றை கொடுத்துள்ளார். அப்போது அந்த மாணவியை வாகனத்தின் அருகே அழைத்து பேனாவை வாங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மாணவியை வாழ்த்தி எதற்காக இந்த பேனா எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மாணவி இந்த பேனாவை கலைஞர் சமாதியில் வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறினார். இதனைக் கேட்ட முதல்-அமைச்சர், சிறுமியின் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன் எனக் கூறி அனுப்பி வைத்தார். இது குறித்து சிறுமி கூறுகையில், முதல்-அமைச்சரை பார்த்தது எனக்கு மிகவும் மகிச்சியாக இருந்தது, என்னை நன்றாக படிக்கச் சொன்னார், நான் முதல்-அமைச்சரை பார்ப்பேன்னு எதிர்பார்க்கலை எனக் கூறினார்.


Next Story