ஸ்கூட்டரில் செல்லும்போது மயக்கம் அடைந்து விழுந்தவர் சாவு


ஸ்கூட்டரில் செல்லும்போது மயக்கம் அடைந்து விழுந்தவர் சாவு
x

ஸ்கூட்டரில் சென்றபோது மயக்கம் அடைந்து விழுந்தவர் மருத்துவமனையில் இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஸ்கூட்டரில் சென்றபோது மயக்கம் அடைந்து விழுந்தவர் மருத்துவமனையில் இறந்தார்.

காண்டிராக்டர்

ஆரணி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 64). இவர் கம்பி கட்டும் காண்டிராக்டராக உள்ளார். இவரது மனைவி அமுதா ஆரணியை அடுத்த கனிகிலுப்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். மணி தினமும் மனைவி அமுதாவை ஸ்கூட்டரில் பள்ளிக்கு அழைத்துச்சென்று விடுவதோடு பள்ளி முடிந்தபின்பும் வீட்டுக்கு அழைத்து வருவார்.

அதன்படி சம்பவத்ன்று காலை மனைவி அமுதாவை பள்ளிக்கு அழைதுத்துச்சென்று விட்டபின் திரும்பிக்ெகாண்டிருந்தார்.

பையூர் அருகே வந்தபோது திடீரென மயக்கம் ஏற்பட்டு ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

வழக்குப்பதிவு

அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த மணிக்கு 2 மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story