கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது


கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 July 2023 12:23 PM GMT (Updated: 9 July 2023 10:54 AM GMT)

கஞ்சா வைத்திருந்த பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்

அவினாசி

அவினாசி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் தேவம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரனையில் அவர் பீகாரை சேர்ந்த ராஜீவ்ரஞ்சன் குமார் (வயது 23) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை செய்து கைது செய்து அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story