தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

திருவேற்காட்டில் தனி குடித்தனம் செல்ல கணவர் மறுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்

திருவேற்காடு, ராமதாஸ் நகரை சேர்ந்தவர் மகேஷ் (வயது 30). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜாக்லின் பியூலா (26) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மகேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். இரவு வீட்டுக்கு வந்தபோது தனது மனைவி ஜாக்லின் பியூலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகேஷ் திருமணத்துக்கு பிறகும் தனது பெற்றோர், தங்கையுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். இதனால் ஜாக்குலின் பியூலா தனிக்குடித்தனம் செல்லும்படி கணவரை வற்புறுத்தினார்.

அதற்கு மறுத்த அவர், தங்கைக்கு திருமணம் முடித்துவிட்டு செல்லலாம் என்றதால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜாக்குலின் பியூலா தற்கொலை செய்ததும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story