தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பாப்பாக்குடி போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2015- ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட முக்கூடல் தியாகராஜர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாப்பாக்குடி போலீசார், செல்வகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





