கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கூடுதல்  கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x

கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தமிழாக அரசு கண்காணிக்க வேண்டும் .என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது

சென்னை,

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிங்கம் 3 , பைரவா படங்கள் பண்டிகை காலங்களில் வெளியானபோது கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சென்னை ஐகோர்ட்டில் தேவராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக அரசு மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது . தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ,

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட தியேட்டர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தை வோட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என தமிழாக அரசு கண்காணிக்க வேண்டும் .என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது


Next Story