அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் : பொள்ளாச்சி ஜெயராமன்


அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்  : பொள்ளாச்சி ஜெயராமன்
x
தினத்தந்தி 7 Jan 2023 1:05 PM GMT (Updated: 7 Jan 2023 2:20 PM GMT)

அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.

பொள்ளாச்சி.

அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒட்டுமொத்த அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல் தொணடர்கள் வரை அனைவரும் எடப்பாடியாரின் தலைமை தான் வேண்டும் என்று ஏற்றுக்கொண்டு அவர் இன்றைக்கு ஒரு மித்த தலைமையாக பிரகாசமாக மக்கள் மன்றத்தில் ஜொலித்து கொண்டிருக்கிறார். நடைபெற்று கொண்டிருக்கிற வழக்கு நியாயமான முறையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

விரைவில் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு கிடைத்து கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் உத்தரவாதத்தோடு நீதிமன்றத்தால் நியமிக்கப்படுவார் என்பதை சொல்லி கொள்கிறேன். கட்சியின் பொதுச்செயலாளராக நீதிமன்றம் தெளிவாக அவரை நியமிக்கும் என்கிற எண்ணத்தோடு இருக்கிறோம். அது நிச்சயமாக நடைபெறும். அதன்பிறகு அ.தி.மு.க. சிறப்பாக தமிழகத்தில் செயல்படும். எடப்பாடியாரை வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள கூடிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கப்படும். அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்


Next Story