மனைவியின் தங்கையுடன் தொடர்பு: கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை


மனைவியின் தங்கையுடன் தொடர்பு: கள்ளக்காதல் ஜோடி லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை
x

ஈரோட்டில், கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இருவரும் லாட்ஜில் பிணமாக கிடந்தனர்.

ஈரோடு சம்பத் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54). இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். ஒருவர் திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். மற்ற 2 மகள்களும் படித்து வருகிறார்கள்.

இதேபோல் ஈரோடு நாராயணவலசு திருமால்நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி காந்திமதி (40). இவர்கள் 2 பேரும் தூய்மை பணியாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன் மற்றும் ஒரு மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு மகள் மட்டும் இவர்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சண்முகத்துக்கு சம்பத் நகரில் வீடு ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால் அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறினார். அதற்கு முன்பு அவர் நாராயணவலசு திருமால்நகரில் தான் வசித்து வந்துள்ளார். தமிழ்ச்செல்விக்கு, காந்திமதி தங்கை முறை ஆகும். அனைவரும் தூய்மை பணியாளர்கள் என்பதால் அதிகாலையில் 5.30 மணிக்கு வேலைக்கு சென்று விடுவார்கள்.

சண்முகமும், காந்திமதியும் ஒரே இடத்தில் வேலை பார்த்ததால் தினமும் அவருடைய மோட்டார் சைக்கிளில் காந்திமதி சென்று வந்தார். மனைவியின் தங்கை என்பதாலும், ஒரே இடத்தில் வேலை பார்த்ததாலும் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

ஒரே இடத்தில் பணி செய்ததால் மற்றவர்கள் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் எழவில்லை. நேற்று முன்தினம் வழக்கம்போல் அதிகாலையில் சண்முகமும், காந்திமதியும் வேலைக்கு சென்றனர். பின்னர் காலை 10.30 மணிக்கு ஈரோடு சத்தி ரோடு வீரபத்திரா வீதியில் உள்ள ஒரு விடுதிக்கு சென்று அங்கு அறை எடுத்து தங்கினர்.

நேற்று காலை 10.30 மணி வரை தான் அறை எடுத்துள்ளனர். இதனால் மதியம் 1 மணி அளவில் விடுதி காப்பாளர் இவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால் உள்ளே இருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. இதனால் ஜன்னல் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு ஸ்டிக்கரை கிழித்து பார்த்தார்.

அப்போது சண்முகமும், காந்திமதியும் எந்தவித அசைவுமின்றி நிர்வாண நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி காப்பாளர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஈரோடு போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சண்முகமும், காந்திமதியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் அருகில் பீர் பாட்டில், எலிபேஸ்ட் மருந்து (விஷம்) கிடந்தது.

போலீசார் விசாரணையில், சண்முகமும், காந்திமதியும் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இங்கு வந்து அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். தங்கள் கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகி விடும் என்று கருதி 2 பேரும் இரவில் பீரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.


Next Story