வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்துக்கு ஏலம்


வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்துக்கு ஏலம்
x

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.

கரூர்

நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ெணய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 62.74½ குவிண்டால் எடை கொண்ட 18 ஆயிரத்து 585 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.22.20-க்கும், சராசரி விலையாக ரூ.23.85-க்கும் என்று மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 971-க்கு விற்பனையானது. அதேபோல் 228.51 குவிண்டால் எடை கொண்ட 490 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.82.69-க்கும், சராசரி விலையாக ரூ.84.19-க்கும், 2-ம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.39-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70.15-க்கும், சராசரி விலையாக ரூ.81.59-க்கும் என்று மொத்தம் ரூ.18 லட்சத்து 37 ஆயிரத்து 886-க்கு விற்பனையானது. 39.29 குவிண்டால் எடை கொண்ட 53 மூட்டை சிவப்பு எள் விற்பனைக்கு வந்தது. இதில் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.116.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ95.69-க்கும், சராசரி விலையாக ரூ.110.99-க்கும் என ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 210-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் போனது.


Next Story