சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி


சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி
x

சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் அம்பு சேர்வை நிகழ்ச்சி நடந்தது.

அம்புசேர்வை நிகழ்ச்சி

நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 15-ந் தேதி 9 சாமிக்கு கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் கடந்த 9 நாட்களாக தினமும் ஒரு அம்பாள் அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நவராத்திரியின் 10-வது நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அம்புசேர்வை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலையில் அசுரனை வதம் செய்வதற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

அசுரன் வதம்

அப்போது வள்ளி- தெய்வானை ஆகியோர் சப்பரத்தில் உடன் வந்தனர். சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர். அங்கு முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது. இதையடுத்துஉற்சாக மிகுதியில் முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்தார். பின்னர் மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் சகடை தேரில் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story