பா.ஜ.க.வை வீழ்த்த மாற்று அணியை உருவாக்க வேண்டும்: சீமான்


பா.ஜ.க.வை வீழ்த்த மாற்று அணியை உருவாக்க வேண்டும்: சீமான்
x

பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும்.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது ,

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும். வருகிற நாடளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து தான் போட்டியிடுவோம். எங்களது தலைமையில் கூட்டணி வைக்க மற்ற கட்சிகள் வருவார்களா? என்பதை இப்போது கூற முடியாது.

பிரதமரை விமர்சிக்கவே கூடாதா?. அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?. அரசை விமர்சனம் செய்வது குற்றமில்லை என நீதிமன்றமே கூறி உள்ளது. அப்படி இருக்கையில் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு தண்டனை விதித்து இருப்பதை படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும். கடந்த தேர்தலின்போதும், இதுபோல் ஒரு அணியை உருவாக்க முயற்சித்தார்கள். பின்னர் அந்த கூட்டணி சிதறுண்டுபோனது. என தெரிவித்தார்


Related Tags :
Next Story