இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பிறந்த நாளை முன்னிட்டு 77 அடி உயர கட்டவுட் வைத்து,பைக் பேரணி நடத்திய ஆந்திர ரசிகர்கள்

மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி பிறந்த நாளை முன்னிட்டு 77 அடி உயர கட்டவுட் வைத்து,பைக் பேரணி நடத்திய ஆந்திர ரசிகர்கள்
Published on

திருப்பதி, 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் 41-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

ஆந்திர மாநிலம் என் டி ஆர் மாவட்டம் பகுதியை சேர்ந்த மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலையில் அம்பருபேட்டை ,எஸ்சி காலனியில் 77 அடி உயரமுள்ள மகேந்திர சிங் தோனியின் கட்டவுட் வைத்தனர்.

மேலும் அங்குள்ள சத்தியபாமா கோவிலில் மகேந்திர சிங் தோனி பெயரில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் 200-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கீசரா வரை தேசிய நெடுஞ்சாலையில் பைக் பேரணி நடத்தி தோனியின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com