அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு


அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு
x

இந்த வழக்கு அவசர வழக்காக நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி சதிஷ்குமார் முன்பு நேற்று நடைபெற்றது. அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்?; நேரம் கேட்பீர்கள்?; எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.

1 More update

Next Story