கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்


கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்
x

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் ஆவணங்களுடன் இணையதளம் மூலமாக இந்த மாதம் 30-ந்தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான ''கல்பனா சாவ்லா விருது'' ஒவ்வொரு ஆண்டும் முதல்-அமைச்சரால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் அடங்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருதை பெறத் தகுதியுள்ளவர் ஆவார்கள்.

2023-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதுக்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் https://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக இந்த மாதம் 30-ந்தேதிக்கு முன்பாக வரவேற்கப்படுகிறது. மேலும், உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story