மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்


மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-2023 நிதியாண்டுக்கான அறிவிப்புகளில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பை தடையை திறம்பட செயல்படுத்தி தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். விண்ணப்ப படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபர், நிறுவன தலைவரால் முறையாக கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் 2 மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 1-5-2023 ஆகும். இதற்கான விண்ணப்ப படிவங்களை tiruvallur.nic.in என்ற இணையதலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story