சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.630-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.630-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.630-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3½ டன் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.630-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.70-க்கும், பட்டு பூ ரூ.120-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.250-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம்போனது.


Related Tags :
Next Story