இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி: ஒரு போதும் ஏற்கமாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி


இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி: ஒரு போதும் ஏற்கமாட்டோம் - சு.வெங்கடேசன் எம்.பி
x

மொழி உரிமை, பன்மைத்துவம் மீது அடுத்தகட்ட தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தயாராகிவிட்டது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மொழி உரிமை, பன்மைத்துவம் மீது அடுத்தகட்ட தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தயாராகிவிட்டது என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒன்றிய கல்வி நிறுவனங்கள், பணித் தேர்வுகள், ஐ.நா பயன்பாடு எல்லாவற்றிலும் இனி இந்தி வழி.

அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு பரிந்துரை. இந்திய மொழிகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அப்பட்டமான தாக்குதல். இந்தியாவை ஹிந்தியாவாக்கும் முயற்சி. ஒரு போதும் ஏற்கமாட்டோம்" என்று கூறியுள்ளார்.


Next Story