ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம்
Published on

வாடிப்பட்டி, 

மதுரை மாவட்ட விற்பனைக் குழு சார்பாக வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் 21 விவசாயிகளின் 77,300 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ.9.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4.70-க்கும், சராசரியாக ரூ.6.20-க்கும் ஏலம் போனது. .மேலும் 9 விவசாயிகளின் 1,216 கிலோ கொப்பரை தேங்காய் ஏலம் விடப்பட்டது. இதில் அதிகபட்சமாக ரூ.72.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50.10-க்கும், சராசரியாக ரூ.52.10-க்கும் ஏலம் போனது. இதனால் ரூ.67,558 கொப்பரை தேங்காய் வர்த்தகம் நடந்தது. மேலும் தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர் அபிநயாவை தொடர்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com