வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் - 4 பேர் கைது


வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் - 4 பேர் கைது
x

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், தடையை மீறி பைக், ஆட்டோ பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் சீறிப்பாய்ந்த ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர். தலைமறைவான சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோ ரேஸ் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story