குற்றாலம் மெயின் அருவியில் 5 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


குற்றாலம் மெயின் அருவியில் 5 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x

குற்றாலம் மெயின் அருவியில் 5 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிந்த பிறகும் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தினமும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து அருவிகளில் குளித்து செல்கிறார்கள். இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவியில் கடந்த 5 நாட்களாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் இரண்டு நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது.


Next Story