நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x

நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்மட்டம் 105 அடியை நெருங்குவதால் பவானிசாகர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதேபோல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்தது.

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று பாதுகாப்பு கருதி முன்கூட்டியே அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது.

அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரி நீராக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை எந்த நேரத்திலும் எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுப்பணித்துறை சார்பாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story