நாமக்கல் மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்


நாமக்கல்  மாவட்டத்தில் 4, 5-ந் தேதிகளில்பறவைகள் கணக்கெடுப்பு பணிவனத்துறையினர் தகவல்
x
தினத்தந்தி 1 March 2023 7:00 PM GMT (Updated: 1 March 2023 7:01 PM GMT)
நாமக்கல்

சேந்தமங்கலம்:

தமிழ்நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டில் நாமக்கல் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 5-ந் தேதிகளில் நடைபெறுகிறது. எனவே கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் கலந்து கொள்ளலாம். மேலும் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story