சென்னை ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள்-பெண்கள் விண்ணப்பிக்கலாம்


சென்னை ஊர்க்காவல் படையில் சேர ஆண்கள்-பெண்கள் விண்ணப்பிக்கலாம்
x

சென்னை ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் அனுப்பலாம், என்று ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை

சென்னை சைதாப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அங்கு விண்ணப்ப மனுக்களை பெற்று நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம். 31-8-2023-ம் தேதிக்குள் விண்ணப்ப மனுக்கள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

50 வயதுக்குள் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு குறைந்தபட்ச கல்வி த குதி. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவா இல்லை. சென்னையில் வசிக்க வேண்டும். குற்றப்பின்னணி இருக்கக்கூடாது. ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றவர்கள் போலீசாருடன் இணைந்து பகல்-இரவு ரோந்து பணி, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே ஒதுக்கப்படும். ரோந்து பணியில் ஈடுபடுவோருக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.


Next Story