தொழிலில் நஷ்டம் திருமண மண்டப உரிமையாளர் தற்கொலை


தொழிலில் நஷ்டம் திருமண மண்டப உரிமையாளர் தற்கொலை
x

தொழிலில் நஷ்டம் ஏற் பட்டதால் திருமண மண்டப உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் நகை கடை மற்றும் திருமண மண்டபம் வைத்துள்ளார்.

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story