ஆடிப்பெருக்கு விழா: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு


ஆடிப்பெருக்கு விழா: தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
x

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வருகிற 3- ந்தேதி(புதன்கிழமை) தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகிற 27-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story