சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை


சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் ரூ.1½ கோடிக்கு கால்நடைகள் விற்பனை

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் கால்நடை சந்தை கூடியது. இதற்கு தர்மபுரி காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்தநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 100-ம், இதே இன கிடாரி கன்றுகள் 150-ம் கொண்டு வரப்பட்டிருந்தன. இதேபோல் சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 150-ம், இதே வகை கிடாரி கன்றுகள் 200-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

இதில் விர்ஜின் கறவை மாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், சிந்து மற்றும் ஜெர்சி கறவை மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும், இதே இன கிடாரி கன்று ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. சீனாபுரம் கால்நடை சந்தையில் நேற்று கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுகளின் விற்பனை ரூ.1 கோடியே 50 லட்சம் வரை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னிமலை, அறச்சலூர், அவல்பூந்துறை, காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, திங்களூர், குன்னத்தூர், செங்கப்பள்ளி, ஊத்துக்குளி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மாடுகளை வாங்கிச் சென்றனர்.


Next Story