செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்


செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்
x

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமை மீட்பு பேரணி சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். மதுராந்தகம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களான மதுராந்தகம், சித்தாமூர், அச்சரப்பாக்கம், லத்தூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது செங்கல்பட்டு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அவைத்தலைவராக திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பாண்டூர் ஊராட்சி தலைவர் பாபு தேர்வு செய்யப்பட்டார். தலைவராக மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், பொருளாளராக ரஞ்சித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.


Next Story