சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கப்படாது-தெற்கு ரெயில்வே


சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கப்படாது-தெற்கு ரெயில்வே
x
தினத்தந்தி 1 Aug 2023 6:30 AM GMT (Updated: 1 Aug 2023 6:57 AM GMT)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கப்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சென்னை சென்ட்ரல் - கோவை இடையே கடந்த ஏப்.8-ஆம் தேதி தொடங்கப்பட்டது. தமிழகத்தின் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் திருச்சி, மதுரை வழியே திருநெல்வேலிக்கு செல்லும்.

சென்னை - திருநெல்வேலி இடையே தற்போது 10 மணி நேர இடைவெளியில் விரைவு ரெயில்கள் இயக்கப்படும் நிலையில் 'வந்தே பாரத்' ரெயில் 8 மணி நேரத்தில் சென்றடையும்.

திருநெல்வேலியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் சென்னைக்கு பிற்பகல் 2 மணியளவில் வந்தடையும். பின் சென்னையிலிருந்து பிற்பகல் 3 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரெயில் திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரெயில் சேவையை வரும் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரெயில் வரும் 6ம் தேதி தொடங்கி வைக்கப்படாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும், வந்தே பாரத் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பதாக வெளியான தகவலுக்கும் தெற்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.


Next Story