சென்னை குடிநீர் வாரியத்தில் பராமரிப்பு பணி இணையதள சேவைகள் நாளை செயல்படாது


சென்னை குடிநீர் வாரியத்தில் பராமரிப்பு பணி இணையதள சேவைகள் நாளை செயல்படாது
x

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள தரவு மையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் 11-ந் தேதி காலை 8 மணி வரை இணையதள சேவைகள் செயல்படாது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துதல், கட்டணம் செலுத்தி லாரிகள் மூலம் பெறப்படும் குடிநீர், புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக்கு விண்ணப்பித்தல், தலைமை அலுவலக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய அனைத்து சேவைகளும் செயல்படாது.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு 11-ந் தேதி காலை 8 மணி முதல் இணையதள சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story