"நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு நெருக்கடி" பாஜகவின் அமலாக்கத்துறையின் செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு நெருக்கடி பாஜகவின் அமலாக்கத்துறையின் செயலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

சென்னை,

விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனக்கூறிய பிறகும் நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் நுழைந்த விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி உள்ளனர். மனிதநேயமற்ற முறையில் பாஜகவின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் உறுதியாகத்தொடர்வோம்.அமலாக்கத்துறை விசாரணையில் செந்தில்பாலாஜி உள்ள நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கை சட்டரீதியாக உறுதியுடன் திமுக எதிர்கொள்ளும் என்றும் முதல்-அமைச்சர் அறிகையில் குறிப்பிட்டுள்ளார்.


Next Story