கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x

ராகுல் காந்தி, சோனியா காந்தி, சித்தராமையாவுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 132 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 132 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் பாஜாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு தொலைபேசியின் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளர்.


Next Story