கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 2 பேர் கைது


கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 2 பேர் கைது
x

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் இறந்து போனார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரோஸ் கான், உமர் பாரூக், முகமது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 9 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவையைச் சேர்ந்த சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய இரண்டு பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


Next Story