காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் தகவல்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் 15 பணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியர் (கணிதம்;) ஒரு பணியிடமும் என மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கான ஊதியம் இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.12,000 வீதம் வழங்கப்படும்.

இதற்கான கல்வி் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் ஆசிரியர்களுக்கான தகுதி விவரம்:

தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லையெனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

முதுகலை ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அந்த ஒன்றியத்திற்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அந்த மாவட்டத்திற்கு எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேற்கண்ட இந்த தற்காலிக பணி நியமனம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2023 மாதம் வரையிலும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்படும் நாள் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரையிலும், தற்காலிகமாக நிரப்பப்படும்.

பணி நாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காஞ்சீபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், காஞ்சீபுரம் மற்றும் ஸ்ரீ்பெரும்புதூர், ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களை அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தை உரிய கல்வித் தகுதி சான்று ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் வருகிற 18-ந்தேதி மாலை 5.45-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story