செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை


செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
x

செல்போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி அருகே உள்ள பெரியகற்பூரம்பட்டியை சேர்ந்தவர் அழகு (வயது 57). இவருடைய மகன் புவனேஷ்வரன் (19). கல்லூரி மாணவர்.இந்த நிலையில் புவனேஷ்வரன் படிப்பில் ஆர்வம் இல்லாமலும் அதிக நேரம் செல்போனையும் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த புவனேஷ்வரன் கொட்டாம்பட்டி அருகே எஸ்.மலம்பட்டியில் உள்ள அக்காள் நல்லம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஷ்வரன் இறந்தார். இது குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story