கல்லூரி மாணவர் தற்கொலை


கல்லூரி மாணவர் தற்கொலை
x

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

பெத்தநாயக்கன்பாளையம் கருமந்துறையை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 20). இவர் ஆத்தூர் காட்டுக்கோட்டை கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் புவனேஷ்வரன் கடந்த 5-ந் தேதி திடீரென வீட்டில் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story