மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்


மண் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Jun 2023 5:15 AM GMT (Updated: 3 Jun 2023 7:11 AM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், ஒன்னல்வாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 லாரிகளை சோதனை செய்தனர். இதில், அனுமதியின்றி மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மண் கடத்தி கொண்டு வரப்பட்டு இருந்த 6 லாரிகள் மற்றும் மண் எடுக்க பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story