18 பேருக்கு கொரோனா


18 பேருக்கு கொரோனா
x

18 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 11 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சையில் இருப்பவர்களில் 14 பேர் நேற்று குணமாகியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. மேலும் மாவட்டத்தில் இன்னும் 91 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவினால் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 272 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.


Next Story