கஞ்சா விற்ற தம்பதி கைது
கஞ்சா விற்ற தம்பதி கைது செய்யப்பட்டனர்.
போத்தனூர்
கோவை குறிச்சி பிரிவு பகுதியில் போத்தனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன் (வயது 30), அவருடைய மனைவி ஷபீனா (30) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், தராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire