ராமநாதபுரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு


ராமநாதபுரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு
x

ராமநாதபுரம் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம்,

சென்னையில் இருந்து இன்று காலை ராமேஸ்வரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை லைன் மேன் பார்த்த உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், 300 மீட்டர் தூரத்திலேயே சிகப்பு கொடி காட்டி ரெயிலை நிறுத்தினார். லைன் மேனின் இந்த செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story