மகராஜகடை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால்மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
குருபரப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள பெரிய பெலவர்த்தியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை மிதித்த போது மின்சாரம் தாக்கியதில், வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire