சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு- அமைச்சர் தகவல்


சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த முடிவு- அமைச்சர் தகவல்
x

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார்.

சென்னை,

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து கடந்த 1ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், கோடை வெயில் குறையாததன் காரணமாக பள்ளிகள் திறப்பு 7ந்தேதிக்கு மாற்றப்பட்டு, அதனை தொடர்ந்து இறுதியாக வருகிற 12-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் தாமதாக திறக்கப்படுவதன் காரணமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

மேலும், கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.

பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும் மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.


Next Story