சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு


சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. திடீர் ஆய்வு
x

சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு இன்று காலை திடீரென சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர் போலீஸ் நிலையத்துக்கு இன்று காலை திடீரென சென்றார். பின்னர் போலீஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலைய பதிவேடுகளையும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு செய்த சைலேந்திராபு வழக்குகளில் புலன் விசாரணை நிலையை பற்றியும் கேட்டறிந்தார். குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் கனிவோடும், அன்போடும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், அவர்களின் குறைகளை உடனுக்குடன் களையவும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

காவல் நிலைய கோப்புகளை சிறப்பாக பராமரித்ததற்காக காவல் நிலைய துணை எழுத்தர் பெண் காவலர் லலிதாவிற்கு ரூ. 5 ஆயிரம் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். காவலர்களுக்கு முறையாக வாராந்திர ஓய்வு வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து காவலர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.


Next Story